வெள்ளி, 4 மே, 2012

சிறுநீரகம் (கிட்னி)



நாம் உயிர் வாழ இன்றியமையாத அங்கங்களில் ஒன்று சிறுநீரகம். 


பேச்சுவழக்கில் மூத்திர காய் என்பர். 

இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் 

மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் 

இ கருவின் நான்காவது மாதத்திலிருந்து 

அதனுடைய இயக்கத்தை தொடங்கி 

மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது. 

சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் 


சில மணி நேரங்களில் உயிரழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு


சிறுநீரகம் (கிட்னி), 

உள்சிறுநீரக வெளியேற்று குழாய் (யுரேட்டர்), 

சிறுநீர்ப்பை (பிளாடர்), 

வெளிசிறுநீரக குழாய் (யுரித்ரா), 

நரம்பு மண்டலம் ஆகிய ஐந்தும் 

ஒருங்கிணந்ததுதான், சிறுநீரக மண்டலம்.
 
வயிற்றின் பின் பகுதியில் 

சிறுநீரகம் (கிட்னி), 

இடுப்பிற்கு சற்று மேலே

முதுகு தண்டின் இரு புறமும்

விலா எலும்புகளின் கீழ்ப்புறத்தில் 

பாதி முடப்பட்டுள்ள 

அவரை விதை வடிவுள்ள இரு உறுப்புகள் ஆகும்.

வலது சிறுநீரகம், இடது சிறுநீரகத்தை விட 

சற்று சிறியதாகவும், கீழேயும் உள்ளது. 

ஒரு சிறுநீரகம் சுமார் 180 கிராம் எடையும்,

10 முதல் 12.5 செ.மீ. நிளமும் 

86.5 செ.மீ. அகலமும் கொண்டது. 

கை முஷ்டி அளவு

பழுப்பு கலந்த கறுஞ்சிவப்பு நிறத்தில்இருக்கும். 




ஒவ்வொரு சிறுநீரகமும்

 சுமார் ஒரு மில்லியன் நெப்ரான்களைக் கொண்டது.


சிறுநீரகத்திற்கு இதயத்திலிருந்து வரும் 

முக்கிய இரத்தக் குழாயிலிருந்து 

நேரடியாக, பெரிய சிறுநீரக இரத்தக் குழாய்கள் மூலம் 

நிமிடத்திற்கு சுமார் 1,200 மி.லி. இரத்தம் பாய்கின்றது.

நெஃப்ரான்-சிறுநீரகத்தின் அடிப்படை சுத்திகரிப்பு அலகு


இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. 

இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், 

தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. 

மால்பிஜியன் குழாயின் மூலம்வடிகட்டி.

மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும்,

மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது. 



நெஃப்ரான்கள் தினமும் சுமார் 180 லிட்டர் ஊணீரை 

இரத்தத்திலிருந்து திரவமாக பிரித்தெடுக்ககின்றன. 

இதனை மற்ற நுண்ணிய குழாய்கள் 

வெறும் 1.5 லிட்டர் கழிவுப்புக்கள் மட்டும் உள்ள 

சிறுநீராக மாற்றி 

உள்சிறுநீர்க்குழாய் எனப்படும் 

இரண்டு ட்யூபுகள் மூலம் 

சிறுநீர்ப்பைக்கு சொட்டு, சொட்டாக அனுப்புகின்றன.  

சிறுநீர்ப்பையில் சிறுநீர் 300-500 மி.லி சேர்ந்தவுடன்

சிறுநீர் கழிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தவுடன் 

சிறுநீர் வெளிசிறுநீர்க் குழாய் வழியாக வெளியேற்றப்படுகின்றது.

இருதயத்தில் இருந்து ரத்தம், 

தமனிகளின் வழியாக நெப்ரானை வந்தடைகிறது. 

இங்கு ரத்தத்தின் திரவப்பகுதியான பிளாஸ்மா, குளுக்கோஸ், 

அமினோ அமிலங்கள், பொட்டாசியம், குளோரைட், 

ஆகியவை வடிகட்டப்படுகிறது. 

எஞ்சிய ரத்தம், நெப்ரானிலுள்ள 

குளோமெரூலஸ் பகுதிக்கு வந்துசேர்கிறது.
 
இதில் போடோசைட்ஸ் செல்கள் 

வடிகட்டியாக செயல்படுகிறது. 

குளோமெரூலசுக்குள் எளிதில் விளங்கிக்கொள்ளமுடியாத 

ரசாயன மாற்றங்களுக்கு உட்படும் ரத்தம், 

இறுதியில், `ட்யூபிள்' என்கிற நுண்குழாய்களில் வந்து சேருகிறது.
 
 டலிலுள்ள சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற 

அவசியமான சத்துகளின் அளவை கணக்கெடுக்கிறது,சிறுநீரகம். 

இவை போதுமான அளவில் இல்லையெனில்,  

அவற்றை மீண்டும் ரத்தத்தில் கலக்க செய்கிறது.
 
சரியான அளவில் இருந்தால்,

தண்ணீரில் நீர்க்கசெய்து  வெளியேற்றகிறது.

தயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் 

நான்கில் ஒரு பங்கை சிறுநீரகம் சுத்திகரிக்கிறது.

நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு 

அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது. 

மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது.

இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன. 

இரத்தம் சுத்தமடைகிறது. 

மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும்

சிறுநீரகத்தின் வேலைதான். 

உடலின் திரவ நிலை

இரத்த அழுத்தம்

எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பர ஸ் 

ச ம நிலைப்படுத்துகிறது.

அமில, காரத்தன்மைகளையும், 

சோடியம் பொட்டாசியம்,அம்மோனியம் போன்றவற்றை 

சரிவிகிதத்தில் சமன்செய்கிறது

இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான 

சுரப்பினை சுரக்கச் செய்கிறது. 

 நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு,

உடலிருந்து வேர்வையாக வெளியேறும் நீரின் அளவு 

இவைகளை கணக்கிட்டு சிறுநீரின் அளவை கட்டுப்படுத்தி

நம் உடலின் மொத்த தண்ணீரின் அளவை

எடையில் 60% ஆக வைத்திருப்பதும் சிறுநீரகங்கள்தான்

 நாம் வேறு நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள்,

உணவுகளில் உள்ள நமக்கே தெரியாத விஷப் பொருட்கள்

ஆகியவற்றை வெளியேற்றுவதும் சிறுநீரகங்கள் தான்.

நரம்பு மண்டலம்

சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகுழாய்கள் மூலம் 

துளித்துளியாக சிறுநீர்ப்பைக்கு 

கொண்டுவந்து சேர்க்க உத்திரவளிப்பது, 

சிறுநீர்ப்பையை விரிவடைய செய்து 

சிறுநீரை தேக்கிவைப்பது, 

சிறுநீர்ப்பை ஓரளவு நிரம்பியதும் 

மூளைக்கு தெரிவிப்பது ஆகிய பணிகளை செய்வது நரம்பு மண்டலமே.

அட்ரினல் சுரப்பி:




கிட்னிகளுக்கு மேல்பகுதியில் இருக்கும். 

 உடம்பில் நீர்ச்சத்து, 

உயிர்ச்சத்துகளை கண்காணிப்பது, 

ரத்த அழுத்தம்-ரத்தக்குழாய்களை பராமரிப்பது 

ஆகிய பணிகளை செய்வது, அட்ரினல் சுரப்பிதான். 

தேவைப்படும் நேரத்தில் 

மனிதனின் இதயவேகத்தை அதிகரித்து, 

ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட சுரப்பி இது.
 

புராஸ்ட்டேட் சுரப்பி:


சிறுநீர்ப்பையின் (பிளாடர்) கீழ்புறத்தில் 

யூரித்திராவைச் சுற்றி அமைந்துள்ளது. 

இது ஆண்களிடம் மட்டுமே காணப்படுகிற உறுப்பு! 

புரஸ்டேட்டில் இருந்து புரஸ்டாடிக் அமிலம் சுரக்கிறது. 

இதுதான் பிளாடரின் செயல்பாடுகள், 

சிறுநீர்பை நிறைவை மூளைக்கு தெரியப்படுத்தி 

வெளியேற்றுவது ஆகிய பணிகளை செய்கிறது.
 
சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்.

· இரத்தம் அசுத்தமாகும்

· இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும்.

· தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் 

சமநிலை பாதிக்கப்பட்டு, 

உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும்.

· மூச்சுத் திணறல், நினைவிழத்தல் 

இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.

யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் 

அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் 

சிறுநீர் சரியாக பிரியாது. 

சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், 

அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல்,

விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், 

குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, 

தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற 

ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் 

உடனே மருத்துவரை அணுகி 

பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 

 யாருக்கு அதிகம் பாதிப்படையும்: 

சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். 

பரம்பரை

இரத்தக் கொதிப்பு, 

பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, 

மலேரியா, 

உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், 

வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள், 

பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கு, 

அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும்,

நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும்,

மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும்,

அடிக்கடிவலிநிவாரணமாத்திரைகளைபயன்படுத்துபவர்களுக்கும், 

உடல் பயிற்சியில்லாதவர்களுக்கும் 

சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு. 

சிறுநீரகத்தைக் காக்க: 


* உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் 


பார்த்துக் கொள்வது அவசியம். 

* புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.


மது, போதை பழக்கம் இருக்கக் கூடாது. 

* அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை 


உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். 

* எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது. 


சிறுநீரை அடக்குதல் கூடாது. 

* தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது. 

* வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை 


உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் 


பொதுவாக வாழைத்தண்டு 3 விரலளவு எடுத்து 


அதனுடன் சின்ன வெங்காயம் 4, 


சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, 


நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, 


கொத்துமல்லி இலை தேவையான அளவு, 


கறிவேப்பிலை 20 இலை, 


இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து


 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 


1 குவளை அளவு வந்தபின் எடுத்து 


காலை மாலை இருவேளை என 


வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் 


சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். 


இது பக்க விளைவில்லாத மருந்தாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக