குங்கும பூவின்நிறம்நாம்
நினைப்பதுபோல்சிவப்புஅல்ல.
ஊதாநிறமானது.
இந்த படத்தில்நாம்பார்க்கும் சிவப்பு நிறமான பகுதி மகரந்தங்கள்'
அதன் இதழ்கள் அல்ல.
குங்கும மலரின்மகரந்தங்களைத்தான் ,
குங்குமப்பூஎன்ற பெயரில்பயன்படுத்துகிறோம்.
நீண்டகாலமாக உலகின் மிக விலையுயர்ந்த
நறுமணப் பொருளாக கருதப்படுகிறது.
அதன் கசப்புச் சுவைக்கு அதில் உள்ள
பைக்ரோக்குரோசின் (picrocrocin),
அதன் வைக்கோல் போன்ற மணத்திற்கு
சாஃபிரானல் (safranal) ஆகிய வேதிப் பொருள்களே காரணம்.
அதில் உள்ள கரோடின்வகை சாயமான
குரோசின் (crocin) இருப்பதால்
அது உணவு வகைகளுக்கும்
துணிகளுக்கும்
தங்கம் போன்ற-மஞ்சள் வண்ணத்தைதருகிறது.
| வீட்டில் வளர்க்கப்படும் சாஃப்ரன் குரோக்கசு செடியானது இலை உதிர் காலத்தில் பூக்கும் பல்லாண்டு கால தாவரம். இது காட்டில் வளர்வதில்லை புதிய செடி உருவாக்கல்- நிலத்துக்குக் கீழே இருக்கும் குமிழ் போன்ற மாச்சத்துச் சேமிக்கும் தண்டுக்கிழங்குகளைத் தோண்டி எடுத்து, சிறு துண்டுகளாக உடைத்து திரும்பவும் நடவேண்டும். இவ்வாறு நடப்படும் ஒரு தண்டுக்கிழங்கு ஒரு பருவம் வரை வாழும், இவை ஒவ்வொன்றும் இம்முறையில் பிரித்து நடுவதன் மூலம் பத்து வரையிலான புதிய தாவரங்களைக் கொடுக்கும் இந்தத் தண்டுக் கிழங்குகள் சிறிய, பழுப்பு நிறமான 4.5 செ.மீ வரையிலான விட்டத்தைக் கொண்ட சிறு கோள வடிவம் கொண்டவையாகும். இவை நார்களாலான அடர்த்தியான காப்புறையைக் கொண்டிருக்கும். கோடைகாலத் தூக்கத்துக்குப் பின்னர் இளவேனில் காலத்தில், இந்தத் தாவரத்தில் 5 முதல் 11 வரையிலான குறுகலாகவும், கிட்டத்தட்ட செங்குத்தாகவும் பச்சை இலைகள் துளிர்க்கின்றன. ஒவ்வொரு இலையும் 40 சென்டிமீட்டர் வரையிலான நீளம் கொண்டதாக இருக்கும். இலையுதிர் காலத்தில் ஊதாநிற மொட்டுகள் தோன்றுகின்றன. இவை அக்டோபர் மாதத்தில், (பெரும்பாலான பூக்கும் தாவரங்கள் தமது விதைகளை வெளியிட்டுவிட்ட பின்னரே), மிகச்சிறந்த நிறமுடைய பூக்களை உருவாக்குகின்றன. அவற்றின் நிறம் மென்மையான ஊதாவிலிருந்து அடர்த்தியான, பல வரிகளாக அமைந்த சாம்பல் கலந்த மென்மையான ஊதா நிறம் வரை வேறுபடுகின்றது பூக்கும் காலத்தில் இந்தத் தாவரங்களின் சராசரி உயரம் 30 செண்டிமீட்டருக்கும் குறைவாக உள்ளன. ஒவ்வொரு பூவிலிருந்தும் மூன்று நீட்சிகளை உடைய சூல்தண்டுகள் உருவாகின்றன. அவை ஒவ்வொன்றின் முனையிலும் 25-30 மி.மீ குறுக்களவுள்ள, பளிச்சென்று தெரியும், கருஞ்சிவப்பு நிறமுள்ள சூலகமுடிகள் காணப்படுகின்றன குங்குமப்பூ சாகுபடிக்கு காலநேரமே மிக முக்கியம் - வளமான மழை நிறைந்த இளவேனில் காலமும் உலர்ந்த கோடைக்காலமும் இதற்கு மிக உகந்தவையாகும். பூப்பதற்கு சற்று முன்னர் வரும் மழை பொழிவு குங்குமப்பூவின் விளைச்சலை ஊக்குவித்து அதிகமாக்குகிறது. பூக்கின்ற காலத்தில் மழை அல்லது குளிரான காலநிலை இருந்தால், அது நோயைத் தூண்டி விளைச்சலைக் குறைக்கும். தொடர்ச்சியான ஈரம் கொண்ட அல்லது வெப்பமான காலநிலை தாவரங்களுக்குத் தீங்கை விளைவிக்கும் மேலும் முயல்களும் எலிகளும் பறவைகளும் குழிகள் தோண்டி பயிர்களை நாசம் செய்கின்றன. இவை தவிர உருளைப் புழுக்களும், இலைத் துருக்களும், தண்டுக்கிழங்கு அழுகல்களும் பிற அச்சுறுத்தல்களாகும், கிழங்குகள் எவ்வளவு ஆழமாக நடப்படுகின்றன, தண்டுக்கிழங்குகளுக்கு இடையே எவ்வளவு இடைவெளி விடப்படுகிறது, காலநிலை ஆகிய இம்மூன்றும் விளைச்சலைப் பாதிக்கின்ற முக்கியமான காரணிகளாகும். அதிக ஆழத்தில் நடப்பட்ட மூலத் தண்டுக்கிழங்குகள் உயர் தரமான குங்குமப்பூக்களை விளைவிக்கின்றன, எனினும் இவை குறைவான மொட்டுகளையும் சேய்த் தண்டுக்கிழங்குகளையும் கொடுக்கின்றன. கோடைகாலத்தில் உறக்க நிலையில் உள்ள தண்டுக்கிழங்குகள்,
இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில்
தமது குறுகலான இலைகளைத் துளிர்த்து,
மொட்டு விடத் தொடங்குகின்றன.
இலையுதிர் காலத்தின் மத்தியப் பகுதியில்
அவை பூக்கின்றன.
காலையில் மலரும் பூக்கள்
மாலைக்குள் வாடத் தொடங்கிவிடுகின்றன என்பதால்
அறுவடையை மிக வேகமாகச் செய்ய வேண்டியது கட்டாயமாகிறது
ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள்
எல்லாச் செடிகளும் பூக்கின்றன.
உலகளவில் ஓராண்டுக்கு கிட்டத்தட்ட
300 டன்கள் குங்குமப்பூ உற்பத்தி செய்யப்படுகிறது
ஈரான், ஸ்பெயின், இந்தியா, கிரீஸ், அஸர்பைஜன்,
மொரோக்கோ, இத்தாலி (உற்பத்தி அளவின் இறங்கு வரிசையில்)
ஆகியவை குங்குமப்பூவை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள்.
பல்வேறு குங்குமப்பூ வகைகளைப் பயிர் செய்யும்
ஈரானே அதிகமாக குங்குமப்பூவை உற்பத்தி செய்யும் நாடாகும்.
இந்நாடு உலகின் மொத்த குங்குமப்பூ உற்பத்தியில்
93.7 சதவீதத்திற்குப் பங்களிக்கிறது.
ஒரு பவுண்டு (454கிராம்கள்) உலர் குங்குமப்பூவை
உற்பத்தி செய்ய 50,000–75,000 பூக்கள் தேவை.
இது ஒரு காற்பந்து மைதானத்தின் பரப்பளவில்
மேற்கொள்ளப்படும் பயிர் செய்கைக்குச் சமமானது
ஒரு கிலோகிராமுக்கு 110,000-170,000 பூக்கள் அல்லது
இரண்டு காற்பந்து மைதானங்கள் தேவை)
150,000 பூக்களைப் பறிப்பதற்கு
நாற்பது மணிநேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது
ஈரப்பதத்தைப் பிரித்தெடுத்தலின் மூலம்
அடுத்து சூலக முடிகள் விரைவாக உலர்த்தப்பட்டு,
காற்றுப்புகாத கொள்கலன்களில் அடைக்கப்படுகின்றன.
பிரகாசமான கருஞ்சிவப்பு நிறம்,
சிறிதளவு ஈரத்தன்மை, நெகிழ்த்தன்மை,
உடைந்த இழைத் துகள்கள் இல்லாமல் இருப்பது
ஆகியவையே புத்தம் புது குங்குமப்பூவின் இயல்புகளாகும்.
இதில் கால்சியம், பொட்டாசியம்,இ ரும்பு,
காப்பர், மேங்கனீஸ், செலினியம்,
துத்தநாகம், மெக்ணீஷிய ம்
போன்ற பல தாதுக்கள் உள்ளன.
வைட்டமின்A , போலிக் அமிலம்
ரைபோபிளவின், நியாசின்,
வைட்டமின்c போன்ற
உயிர் சத்துக்களும் க ணிசமாக உள்ளன.
நோய் எதிர்ப்பு தன்மை,
மேனி எழிலைபாதுகாப்பதிலும்
இவை பெரிதும்உதவுகின்றன.
மருத்துவத்தில், பாரம்பரிய மருத்துவ முறைகளின் ஒரு பகுதியாக
வெகு காலமாகப் பயன்பட்டுள்ளது.
நவீன மருத்துவம் கூட குங்குமப்பூவில் புற்றுநோய் எதிர்ப்பு
விகார எதிர்ப்பு (விகாரத்தைத் தடுக்கின்ற),
நோய் எதிர்ப்பை மாற்றுகின்ற
மற்றும் ஆக்சிசனேற்றத் தடுப்பான்-போன்ற இயல்புகள்
இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளது
குங்குமப்பூவானது, கரும்புள்ளிச் சேதம் (macular degeneration)
மற்றும் மாலைக் கண் நோய் ஆகியவற்றைக் குறைப்பது
பிரகாசமான வெளிச்சத்தின் நேரடித் தாக்கத்திலிருந்தும்
விழித்திரை அழுத்த நோயிலிருந்தும்
கண்களைக் காக்கிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன
குங்குமப்பூ குறிப்பாக சீனா, இந்தியா போன்ற நாடுகளில்
துணிச்சாயமாகவும்
நறுமணப்பொருள் உற்பத்தியிலும்
பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் போலிகல் அதிகம் விற்கப்படுகிறது .
குங்குமப்பூவுடன் பீட்டுக் கிழங்குகள்,
மாதுளை நார்கள்,
சிவப்புச் சாயமிடப்பட்ட பட்டு நார்கள் அல்லது
சாஃப்ரன் குரோகசின் சுவையற்ற,
மணமற்ற மஞ்சள் மகரந்தக் கேசரங்கள் கலப்பது
பிற முறைகளில் குங்குமப்பூ இழைகள் தேன் அல்லது
காய்கறி எண்ணெய் போன்ற பாகுப் பொருள்களில்
ஊற வைக்கப்படுகின்றன.
எனினும், தூளாக்கப்பட்ட குங்குமப்பூவில்
மஞ்சள், சிவப்பு மிளகு, செறிவைக் குறைக்கின்ற
நிரப்பிகளாகப் பயன்படுத்தப்படும் பிற தூள்கள்
ஆகியவற்றைக் கொண்டு கலப்படம் செய்வ து
வேறுபட்ட தர குங்குமப்பூ வகைகளைக் கலந்து
தவறான பெயர்ச்சீட்டுகள் ஒட்டி விற்பதன் மூலமாகவும்
கலப்படம் செய்யப்படுகிறது
இவ்வாறு இந்தியாவில் பெரும்பாலும்
உயர் தரமான காஷ்மீரி குங்குமப்பூவானது
விலைகுறைவான ஈரானிய இறக்குமதி வகைக்
குங்குமப்பூவுடன் கலக்கப்படுகிறது.
இந்தக் கலவைகள் பின்னர்
சுத்தமான காஷ்மீர் குங்குமப்பூ எனக் கூறி
சந்தையிலேற்றப்படுகிறது.
இதனால் காஷ்மீர் விவசாயிகளுக்கு
பெரும் வருமான இழப்பு உண்டாகிறது.
குங்குமப் பூவை நீரில் போட்டால்
நீரின் நிறம் மாறினால் அது போலி.
தரமான பூவை வெதுவெதுப்பான
பாலிலோ, நீரிலோ போட்டால்
உடனே நிறம் மாறாது.
நன்கு ஊறி
கிட்டத்தட்ட 24 மணி நேரம்
கழிந்த பிறகு
தங்க மஞ்சள் நிறம் கிடைக்கும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக