பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில்
ரிசர்வ்வங்கி ,சமீபத்தில்அறிவித்த
புதிய கொள்கைகள்,
வங்கிப் பயனாளிகளுக்கு பல நன்மைகளை
ரிசர்வ்வங்கி ,சமீபத்தில்அறிவித்த
புதிய கொள்கைகள்,
வங்கிப் பயனாளிகளுக்கு பல நன்மைகளை
தருவதாக இருக்கிறது என்கிறார்கள்.
1. வீட்டு கடன் தொடர்பாக -
மாறும் வட்டி விகிதத்தில் [ floating interest rate]
வீட்டு கடன் வாங்கியவர்கள்
விரும்பினால் முன்கூட்டியே கடனை
முழுமையாக திரும்ப செலுத்தலாம்.
மாறும் வட்டி விகிதத்தில் [ floating interest rate]
வீட்டு கடன் வாங்கியவர்கள்
விரும்பினால் முன்கூட்டியே கடனை
முழுமையாக திரும்ப செலுத்தலாம்.
கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
2. வங்கி கணக்கு துவங்க-
வங்கி கணக்கு துவங்க குறைந்த பட்ச
இருப்புத் தொகை ஆக ரூ.1000-5000 வரை
வைத்துக் கொள்ள வேண்டும்.
இதுவும் வங்கிக்கு வங்கி மாறலாம்.
சில அடிப்படை வசதிகளுடன் கூடிய
அடிப்படை சேவிங்ஸ் டெபாசிட் கணக்குகளை
எவ்வித குறைந்த பட்ச இருப்புத் தொகை
இல்லாமலே இனி வைத்துக் கொள்ளலாம்
என ரிசர்வ்வங்கி அறிவித்துள்ளது.
இதனால் வங்கி கணக்கு தொடங்க
பண வசதி இல்லை என்பது
ஒரு தடையாக இருக்காது.
3. வங்கி சேவைக்கு-
வங்கி வாடிக்கையாளர் அனைவருக்கும்
தனி அடையாள எண்
[Unique Customer identification code number]
வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க
ரிசர்வ்வங்கி அறிவித்துள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள்
தங்களுக்கு தேவையான சேவையை
பெறுவது எளிதாகும்.
மேற்கூறிய மூன்று புதிய வசதிகளால்
வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்.
இதனால் வாடிக்கையாளர்களுக்கும்
வங்கிகளுக்கும் இடையே நம்பிக்கையும்,
நல்லுறவும் மேலோங்கும் .
வங்கி சேவை வரலாற்றில் இது
ஒரு திருப்ப முனை எனலாம்.
மேலும் சென்ற 19 மாதங்களில்
13 முறை ரிசர்வ்வங்கி
வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது.
கடந்த மூன்றாண்டுகளில்
முதன் முறையாக தனது கடன்கொள்கையில்
'ரெப்போ' வட்டியை 1/2% குறைத்துள்ளது.
[ 8.50% லிருந்து 8%ஆக ]
இந்த வட்டி குறைப்பின் பயனாக
வீ ட்டுக் கடன், வாகனக் கடன்,
தனி நபர் கடன் மற்றும்
தொழில் கடன் ஆகியவற்றின்
வட்டி வீதம் 1/4% முதல் 1/2% வரை குறையும்
அறிவிப்பு வந்தவுடனேயே சில
வங்கிகள் வீ ட்டுக் கடன், வாகனக் கடன்
வட்டி வீதத்தை 1/4% முதல் 3/4% குறைத்து விட்டது.
மீதமுள்ள வங்கிகள் விரைவில் மேற்கொள்ளும்
வட்டிக் குறைப்பு சதவீதம்
கடன் தொகையின் அளவு
மற்றும் திரும்ப செலுத்துவதற்கான
காலக் கெடுவை பொறுத்து அமையும்
ரிசர்வ்வங்கியின் கடன் கொள்கை
இரண்டு நோக்கங்களை அடிப்படையாக கொண்டது
.
1.வளர்ச்சிக்குத் தேவையான வங்கிக் கடன்கள்
தடை இன்றி கிடைக்க வேண்டும்.
2. பண வீக்கத்தையும், விலைவாசியையும்
கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும்.
ஓரிரு மாதங்களுக்கு முன் இருந்த
நிலையோடு ஒப்பிடுகையில்
தற்போது பணவீக்க விகிதம் குறைந்துள்ளது
ஆனால் வளர்ச்சி நிலையில் தேக்க நிலை
ஏற்படக்கூடாது என்பதற்காக
வட்டி குறைக்கப் பட்டு உள்ளது.
பல வருடங்களுக்குப் பின்
இந்த கடன் கொள்கை உற்சாகப்படுத்திஉள்ளது.
அதேபோல் இதனால் பாதிப்பு
அடைபவர்களும் உண்டு.
ஏனென்றால் கடனுக்கு வட்டி குறையும்போது
டெ பாசிட்களுக்கான வட்டியும் குறையும்.
இதனால் சிறு சேமிப்பாளர்கள்,
மூத்த குடிமகன்கள் பாதிக்கப் படுவார்கள்.
டெ பாசிட்களுக்கான வட்டி
உடனடியாக குறையுமா?
நாளடைவில் குறையுமா ?
எந்த அளவில் குறையும் ?
பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
அந்தந்த வங்கியின் நிதி ஆதாரம்,
கடன்களுக்கான தேவை,
பணச் சந்தையில் வங்கிகள்
வாங்கக்கூடிய குறுகிய கால
கடன்களுக்கான வட்டி விகிதம்
என பல அம்சங்களை பொறுத்தே
டெ பாசிட்களுக்கான வட்டி
கணக்கிடப்படும்.
கடந்த காலங்களில் இதுபோன்ற
தருணங்களில் டெ பாசிட்வட்டி
குறையாமலும் இருந்து உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக