செவ்வாய், 21 ஜனவரி, 2014

பெண்கள் திருமண உதவித் திட்டம்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்:-

இவர் முதல் பெண் மருத்துவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி 

இந்தியத் திருநாட்டில் முதல் சட்டசபை பெண் உறுப்பினர் 

 சென்னை அடையார்   புற்றுநோய் மருத்துவமனைக்கு  வித்திட்டவர் .

ஜாதி, மத பேதங்களை ஒழிக்கவும், கலப்புத் திருமணங்களை ஆதரிக்கவும்,

தமிழக அரசால் இந்த திட்டம் செயல்ப் பட்டு வருகிறது.

24000 ரூபாய்க்கு குறைவான ஆண்டு வருமானம் உடைய 

ஏ ழை ப் பெண்கள் இதனால் பயன் பெறலாம்.

திருமணத்தின் போது  பெண்ணுக்கு 18 வயது 

பூர்த்தியாகியிருக்க வேண்டும். 

உச்ச வரம்பு ஏதுமில்லை.

வருமான வரம்பு ஏதுமில்லை.

15 நாட்களுக்குள் உதவி தொகை கிடைக்கும்.

இந்த திட்டத்தில் இரண்டு வகை உண்டு.

1.   முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் 

பிற்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினரை 

திருமணம் செய்திருக்க வேண்டும்.

 10-ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேறிய அல்லது தவறியவர்களுக்கு  

ரூ. 25 ஆயிரம் (15 ஆயிரம் காசோலை , 10 ஆயிரம் சேமிப்பு பத்திரம்),

    தாலிக்கு  4 கிராம் தங்கம் வழங்கப்படும்.

2.  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் 

பிற்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் 

முற்பட்ட வகுப்பினரை மணம் முடித்திருக்க வேண்டும். 

  பட்டய/ டிப்ளமோ  படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் 

 (30 ஆயிரம்காசோலை  , 20 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரம்),
  
 தாலிக்கு  4 கிராம் தங்கம் வழங்கப்படும்.

தேவையான சான்றிதழ்கள் :- 

திருமண அழைப்பிதழ் அல் திருமண பதிவு  சான்றிதழ்,

ஜாதி சான்றிதழ்,

வயது சான்றிதழ்கள் ,

கல்வி சான்றிதழ்கள்

திருமணம் நடந்த தேதியிலிருந்து 

இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 மாவட்ட சமூகநல அலுவலர் அல் 


சமூகநல விரிவாக்க அதிகாரியிடம் 

விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள்

 இ ணை த்து  விண்ணப்பிக்க வேண்டும்.

திருமண நாளுக்கு முன் 40 நாட்களுக்குள் 

விண்ணப்பிக்க வேண்டும்.


 அன்னை தெரசா ஆதரவு அற்ற பெண்கள் திருமண உதவி திட்டம்:-

பெற்றோரை இழந்த ஆதரவு அற்ற பெண்குழந்தைகள் 

திருமண வயதை அடையும் நேரத்தில் உதவ 

தமிழக அரசால் இந்த திட்டம் செயல்ப் பட்டு வருகிறது.

ஆதரவு அற்ற பெண் அல் பாதுகாவலரின் 

ஆண்டு வருமானம் 24000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.

மணபெண்ணிற்கு திருமணத்தின் போது  பெண்ணுக்கு 18 வயது 

பூர்த்தியாகியிருக்க வேண்டும். 

உச்ச வரம்பு ஏதுமில்லை.

விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் உதவி தொகை கிடைக்கும்.

இதிலும் இரண்டு வகை உண்டு.

இதன் விதி  முறைகள் 

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண

உதவி திட்டம் போன்றதே.

தேவையான சான்றிதழ்கள் :- 

திருமண நாளுக்கு முன் 40 நாட்களுக்குள் 

விண்ணப்பிக்க வேண்டும்

அவர் வசிக்கும் தொகுதியின் எம்.எல்.ஏ அல் எம். பி யின்  சான்றிதழ்.

அல் தாய், தந்தையின் இறப்பு  சான்றிதழ்

தாசில்தாரிடம் இருந்து பெண் அல் பாதுகாவலரின் 

வருமான சான்றிதழ்

வயது சான்றிதழ்கள் ,

கல்வி சான்றிதழ்கள்

இணைத்து அனுப்ப வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அல் சமூகநல அதிகாரியிடம் 

 விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள்

 இ ணை த்து  விண்ணப்பிக்க வேண்டும்.


இவை குறித்து தகவல் அறிய 

மாவட்ட ஆட்சியர் அல் மாவட்ட சமூகநல அதிகாரி

மாநில அளவில் சமூகநல இயக்குநரை அணுகலாம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக