செவ்வாய், 21 ஜனவரி, 2014

பெண்கள் திருமண உதவித் திட்டம்

மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்:-

நாகபட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகில் உள்ள 

மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி 

எழுத்தாளர்,  சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை 

ஒழிக்கப் பாடு பட்ட ஒரு தையிரியமான பெண்மணி.

இவரது நினைவாக ஏழை தாய்மார்கள்

 தங்கள் பெண்களுக்கு திருமணம் செய்யவும்,

பெண் கல்வியை மேம்படுத்தவும்,தமிழக அரசு  

திருமண உதவித் திட்டம் செயல்படுத்துகிறது.

ஆண்டு வருவாய் 24 ஆயிரத்திற்கு குறைவான ஏழை பெண்கள் பெறலாம்.

மணப்பெண்ணுக்கு குறைந்த பட்சம் 18வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

அதிக பட்ச  வயது வரம்பு இல்லை.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே உதவி வழங்கப் படும்.

இந்த திட்டத்தில் இரண்டு வகை உண்டு.

1. பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்து தேறிய, தேறாத 

பிரைவேட்டாக தேர்வு எழுதி  தேறிய பெண்களின் 

தாய் அல்லது தந்தைக்கு 25ஆயிரம் உதவி தொகையும், 

தாலிக்கு அரைப் பவுன் [22 கேரட்] தங்க காசும் தரப்படும்.

மலை வாழ் மக்கள் என்றால் 5ம் வகுப்பு பாஸ் பண்ணினாலே போதும்.

2. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியிலோ, தொலை தூர கல்வியிலோ 

அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலை கழகத்திலோ 

பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா படித்த பெண்களுக்கு 

50 ஆயிரம் உதவி தொகையும், அரைப் பவுன் தங்க காசும் தரப்படும்.

திருமணத்திற்கு முன்னதாக 40 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வெகு அபூர்வமான தருணங்களில்  திருமணத்திற்கு 

முதல் நாள்  விண்ணப்பித்தாலும் தரப்படும்.

 விண்ணப்பித்து 15நாட்களில் உதவி அளிக்கப்படும்.

திருமண நாளன்றோ அல்லது அதன் பிறகோ 

 வரும்  விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட மாட்டாது.

தர வேண்டிய சான்றிதழ்கள் :-

பள்ளிக்கூட மாற்று  சான்றிதழ்,

பத்தாம் வகுப்பு/ டிகிரி/  டிப்ளோமா மதிப்பெண் சான்றிதழ்,

வருமான சான்றிதழ்,  


திருமண அழைப்பிதழ் 

இணைத்து அனுப்ப வேண்டும்.

எங்கு விண்ணப்பிக்க  வேண்டும் :-

மாநகராட்சி மற்றும்  நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 

அப்பகுதியின் தாலூக்கா அலுவலரிடம் 

கிராமப் பகுதிகளில் ஊராட்சி அல்லது 

சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல  அலுவலரிடம்,

 சமூக நல  அபிவிருத்தி  அதிகாரிகளிடம், 

கிராம நல அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம்.





டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் விதவைகள் மறுமண உதவித் திட்டம்:- 

சமூக சேவகி, சித்த மருத்துவர் மற்றும் தமிழ் மொழி மற்றும்

தமிழிசைக்குப் பாடுபட்ட ஒருவர்.

ஈ.வெ.ரா.வுக்கு "பெரியார்" எனும் பட்டத்தை கொடுத்தவர்.

விதவைகள் மறுவாழ்வுக்கும், 

மறுமணத்தை ஊக்குவிக்கவும் 
  
தமிழக அரசு  உதவித் திட்டம் செயல்படுத்துகிறது.

கணவனை இழந்த பின் மறுமணம் செய்து கொள்ளும் 

யாவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மறுமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு குறைந்த பட்சம் 20வயதும்,

மணமகனுக்கு அதிக பட்சம் 40வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வருமான உச்ச வரம்பு எதுவும் இல்லை. 

விண்ணப்பித்து 15நாட்களில் உதவி அளிக்கப்படும்.

இந்த திட்டத்தில் இரண்டு வகை உண்டு.

1. கல்வித் தகுதி தேவை இல்லை.

10ஆயிரம் ரூபாய்க்கான காசோலை,

15ஆயிரம் ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம்,

தாலிக்கு அரைப் பவுன் தங்கம் தரப்படும்.

2. பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா படித்த பெண்களுக்கு 

50ஆயிரம் ரூபாய் உதவி தொகையில் 

30ஆயிரம் ரூபாய் ரொக்கம், 

20ஆயிரம் ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம்,

தாலிக்கு அரைப் பவுன் தங்கம் தரப்படும்.

தர வேண்டிய சான்றிதழ்கள் :-

மறுமணம் ஆன ஆறுமாதங்களுக்குப் பின் 

விதவை என்பதற்கான சான்றிதழ்,

மறுமணத்திற்கான அழைப்பிதழ்,

கணவன் ,மனைவியின் வயது  சான்றிதழ்,

இரண்டாம் பிரிவில் என்றால் 

அதற்குரிய கல்வி சான்றிதழ் தர வேண்டும். 

 எங்கு விண்ணப்பிக்க  வேண்டும் :-

மாவட்ட சமூக நல  அதிகாரிகளிடம், 

அல்லது சமூக நல விரிவாக்க அதிகாரிகளிடம்

 விண்ணப்பிக்க வேண்டும். 



ஈ.வெ.ரா.மணியம்மை நினைவு  ஏழை விதவைகளின்  

 பெண்கள் திருமண உதவித் திட்டம்:-

ஈ.வெ.ரா.வை மணந்து, அவரின் போராட்டங்களுக்கு 

உறுதுணையாய் நின்ற ஒரு வீரப் பெண்மணி.

ஆண்டு வருவாய் 24 ஆயிரத்திற்கு குறைவான ஏழை விதவை 

தாய்மார்களின் பெண்களின் திருமணத்திற்காக      

தமிழக அரசு  உதவித் திட்டம் செயல்படுத்துகிறது.

மணப்பெண்ணுக்கு குறைந்த பட்சம் 18வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

அதிக பட்ச  வயது வரம்பு இல்லை.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே உதவி வழங்கப் படும்.

இதர விதி முறைகள் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் 

நினைவு திருமண உதவித் திட்டம் போன்றதே.

தர வேண்டிய சான்றிதழ்கள் :-

தாசில்தாரிடம் இருந்து பெற்ற விதவை சான்றிதழ்,

வருமான சான்றிதழ்,  

திருமண அழைப்பிதழ்,

மகளின் வயது  சான்றிதழ், 

அதற்குரிய கல்வி சான்றிதழ் தர வேண்டும். 

அரசாங்கத்தின் விதவை பென்சன் பெறும் பெண்கள் 

வருமான சான்றிதழ் இணைக்க தேவை இல்லை. 



 எங்கு விண்ணப்பிக்க  வேண்டும் :-


 மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் 

நினைவு திருமண உதவித் திட்டம் போன்றதே.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக