முதல் பதிவு , பயன் உள்ளதாக இருக்கட்டும்.
புதிய தலைமுறையின்
பயிற்சிப் பத்திரிகையாளர் திட்டம்- 2012
செய்தி சேகரிக்கும் துடிப்பு ,
எழுத்தாற்றல்,
கற்றுக் கொள்ளும் ஆர்வம்,
சமூக பொறுப்புடன் புதிய முயற்சிகள்
செய்து பார்க்கும் குழுவுடன்
சேர்ந்து செயல் படும் ஆர்வம் உள்ளவர்கள்
இந்த பயிற்சிக்கு வரவேற்கப் படுகிறார்கள்.
வயது வரம்பு- 18 க்குமேல் 30 க்கு கீழ்
பயிற்சிக் காலம்- ஓராண்டு
ஆற்றலில் சிறந்த ஆண், பெண்,
மாணவர், மாணவர் அல்லாதவர்
அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இதழியல், தமிழ் இலக்கியம்
பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு
மாதம்தோறும் ஒரு சிறு
உதவி தொகையும்,
பிரசுரிக்கப்படும் அவர்களது படைப்புகளுக்கு
சன்மானமும் அளிக்கப்படும்.
படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள்-
பிறந்த தேதி சான்றிதழ்
வசிப்பிட சான்றிதழ்
மாணவர் என்றால்
கல்லுரி அடையாள அட்டை
நகல்களை இணைத்தால் போதும்.
உங்க படைப்புகளில் சிறந்தது என
நீங்கள் கருதும் ஒன்றையும்
இணைத்து அனுப்ப வேண்டும்.
அது செய்திக் கட்டுரையாகவோ,
புகைப்படமாகவோ இருக்கலாம்.
கதை, கவிதைகள் கூடாது.
கவனிக்க வேண்டியவை-
அனுப்பும் படைப்பு உங்கள்
திறமைக்கு சான்றாக இருக்க வேண்டும்
படைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள்
பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
பங்கேற்க விரும்புவோர்
எந்த ஒரு அரசியல் கட்சியிலும்,
கட்சி சார்ந்த அமைப்புகளிலும்
உறுப்பினராக இருக்கக் கூடாது.
[அட்ரா சக்கை அட்ரா சக்கை]
பொய் சொல்லி சேர்பவர்களிடம் கவனம்.
வேறு இதழ்களில் பணியாற்றுவோர்
பணியாற்றியோர் விண்ணப்பங்கள்
கருத்தில் கொள்ளப் படாது.
சமூக பொறுப்பினை புரிந்து கொள்ள
இளைய தலை முறைக்கு வாய்ப்பினை
தரும் புதியதலைமுறை இதழுக்கு
என் வாழ்த்துக்கள்.
இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி
நாட்டுக்கும்,
தம் வாழ்க்கைக்கும்
நல்லதொரு மாற்றத்தை கொண்டு
வரப்போகும் இளையோருக்கு
MY HEARTY WISHES.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக